ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை
சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் பூர்த்தியடைகின்ற
நிலையில் அதனை கொண்டாடுவதில் இலங்கை வாழ் மக்கள் மும்முராக ஈடுபட்டு வருகின்றனர் இந்த வகையில் திஹாரிய மக்களும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமது வீடுகளிலும் கடைகளிலும் தேசிய கொடிகளை தொங்க விட்டிருந்தனர்.
திஹாரியில் தேசிய கொடி விற்பனை
தொடர்பாக வியாபாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய கொடிகள் அதிகம் விற்பனையானதாகவும் சுதந்திர
தினத்தை கொண்டாடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இது தவிர திஹாரியில் இயங்கும் Credence Foundation சுதந்திர தினத்தை முன்னிட்டு திஹாரிய பிரதேசத்தில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தது. அத்தோடு நீதிக்கும் சமாதானத்துக்கான முன்னணியும் போஸ்டர்களை ஒட்டியிருந்தது.
No comments:
Post a Comment