புத்தகத்தின் அட்டை |
சவூதி அரேபிய இஸ்லாமிய அழைப்பாளர்
ஆஇல் கர்னீ எழுதி 'லா தஹ்ஸன்' (கவலைப்படாதே) என்ற
நூலின் விற்பனை 10 மில்லியன் பிரதிகளையும்
தாண்டி விட்டதாக அண்மையில் நடந்த கெய்ரோ சர்வதேச புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்ட
குறித்த புத்தகத்தின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வகையில் அதிக பிரதிகள்
விற்பனை செய்யப்பட்ட அரபு நூலாக இது இடம்பிடித்திருக்கிறது.
இது பற்றி அல்அரேபியா செய்தி
நிறுவனத்துக்கு கருத்துத் தெரிவித்த ஆஇல் கர்னி, 30 மொழியில் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகவும், இந்த புத்தம் குறித்து
ஜேர்மன் பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஒரு கலாநிதிப்பட்ட ஆய்வு நடாத்தப்பட்டிருப்பதாகவும்
தெரிவித்தார்.
சந்தோஷமாக இருத்தல், சுய ஊக்கம் குறித்து
சம்பவங்கள், கருத்துக்கள் ஊடாகப்
பேசும் இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு 'கவலைப்படாதே' என்ற பெயரில் புத்தகமாக
வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment