வளைகுடா நாடுகளது விவகாரங்களில்
ஈரான் தலையிடத் தேவையில்லை என்று ஷெய்குல் அஸ்ஹர் அஹ்மத் அத்தீப் அவர்கள் ஈரான் ஜனாதிபதி
அஹ்மதி நஜாதிடம் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நஜாதுக்கும் ஷெய்குல் அஸ்ஹர்
அஹ்மத் அத்தீபுக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் அல்அஸ்ஹர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
Tuesday, February 5, 2013
Monday, February 4, 2013
திஹாரியில் சுதந்திர தினம்
ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை
சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் பூர்த்தியடைகின்ற
நிலையில் அதனை கொண்டாடுவதில் இலங்கை வாழ் மக்கள் மும்முராக ஈடுபட்டு வருகின்றனர் இந்த வகையில் திஹாரிய மக்களும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமது வீடுகளிலும் கடைகளிலும் தேசிய கொடிகளை தொங்க விட்டிருந்தனர்.
திஹாரியில் தேசிய கொடி விற்பனை
தொடர்பாக வியாபாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய கொடிகள் அதிகம் விற்பனையானதாகவும் சுதந்திர
தினத்தை கொண்டாடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
Saturday, February 2, 2013
'லா தஹ்ஸன்' நூலின் விற்பனை 10 மில்லியன் பிரதிகளையும் தாண்டிவிட்டது
புத்தகத்தின் அட்டை |
சவூதி அரேபிய இஸ்லாமிய அழைப்பாளர்
ஆஇல் கர்னீ எழுதி 'லா தஹ்ஸன்' (கவலைப்படாதே) என்ற
நூலின் விற்பனை 10 மில்லியன் பிரதிகளையும்
தாண்டி விட்டதாக அண்மையில் நடந்த கெய்ரோ சர்வதேச புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்ட
குறித்த புத்தகத்தின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வகையில் அதிக பிரதிகள்
விற்பனை செய்யப்பட்ட அரபு நூலாக இது இடம்பிடித்திருக்கிறது.
இது பற்றி அல்அரேபியா செய்தி
நிறுவனத்துக்கு கருத்துத் தெரிவித்த ஆஇல் கர்னி, 30 மொழியில் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகவும், இந்த புத்தம் குறித்து
ஜேர்மன் பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஒரு கலாநிதிப்பட்ட ஆய்வு நடாத்தப்பட்டிருப்பதாகவும்
தெரிவித்தார்.
Sunday, January 27, 2013
இன்று காழி ஹுஸைன் அஹ்மத் அவர்களை நினைவுகூறும் மாநாடு
Thursday, December 27, 2012
ஈரானின் பெண் அமைச்சர் பதவி நீக்கம்
மர்ழியா வஹீத் |
ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நஜாத் அந்நாட்டு
அரசாங்கத்தின் ஒரே ஒரு பெண் அமைச்சரான சுகாதார அமைச்சர் மர்ழியா வஹீத் தஸ்தத்ரஜியை
நேற்று (27.12.12)
வியாழக்கிழமை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஈரானி
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பதவி நீக்கத்துக்கான காரணங்கள் ஏதும் சுட்டிக்காட்டப்படாததோடு, அமைச்சின் வேலைகளுக்காக தற்காலிகமாக முஹம்மத்
ஹுஸைன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tuesday, December 25, 2012
திஹாரியும் குப்பையும்: ஒரு செய்தி!
சரி, எல்லாருக்கும் ஒன்னாவது
ஏன்ட ஸலாத்த செல்லிக் கொளுகுறன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
திஹாரி வந்து கொழும்பு கெண்டி
ரோட்ல கொழும்பிலீந்து வர போக்கல ஈக்கிய ஒன்னாவது முஸ்லிம் ஊர். சனத்தொக 15,000 என்டு ஒரு சேர் சென்ன.
போர்த்துக்கேய ஆக்கள் கொழும்புகு 1505 ல வந்து எறங்கின டைம் அங்கீந்த முஸ்லிம் ஆக்களுக்கு கொடும செஞ்ச.
அப்ப அங்கீந்த முஸ்லிம் ஆக்கள் திஹாரிக்கு வந்து ஊடுகள கெட்டிகொண்டு வாழ தொடங்கினாம்.
இபிடிதானாம் திஹாரிகி முஸ்லிம் ஆகள் வந்தென்டு செல்லுற.
சரி விஷயத்துக்கு வரோம்!
Subscribe to:
Posts (Atom)