ஷஹீத் சையித் குதுப்
தமிழில்: அஷ்-ஷெய்க் எஸ்.எச்.எம்
ஃபழீல்
இஸ்லாமிய சிந்தனை
ஓக்டோபர்-டிசம்பர் 2001
'நிச்சயமாக அல்லாஹ் (அத்ல்) நீதி செலுத்துமாறும் (இஹ்ஸான்) நன்மை
செய்யுமாறும், உறவினர்களுக்குக்
கொடுத்துதவுமாறும் (உங்களுக்குக்) கட்டளை பிறப்பிக்கிறான். மேலும் (பஹ்ஷாஉ) மானக்கேடான
காரியங்கள், (முன்கர்) பாவச் செயல்கள், (பக்ய்) அத்துமீறல்கள்
என்பவற்றில் ஈடுபட வேண்டாம் எனத் தடுக்கிறான். நீங்கள் நினைவுகூர்ந்து சிந்திப்பதற்காக
இவ்வாறு உபதேசம் செய்கிறான்.'
(அந்நஹ்ல்: 90)
அல்குர்ஆன் எனும் வேதநூல்
ஓர் உம்மத்தை உருவாக்க, ஒரு சமூகத்தை ஒழுங்குற
அமைப்பதற்காக வந்ததாகும். அதுமட்டுமன்றி ஒரு பிரத்தியேகமான ஓர் உலகை அது கட்டியெழுப்ப
வந்ததாகும். அது முன்வைக்கும் தூது சர்வதேச தன்மை கொண்டது. முழு மனித சமூகத்துக்குமானது.
எனவே, ஒரு கோத்திரத்திற்காக, குழுவுக்காக இனத்துக்காக
பக்கச்சார்பாக, ஓரவஞ்சனையாக நடப்பது
அதன் போக்கல்ல. முhறாக 'அகீதா' எனும் நம்பிக்கைக்
கோட்பாடு மட்டுமே சகலரையும் பிணைக்கும் கயிறாயவும் தளமாகவும் அமையும். ஆதற்காகவே மனிதன்
உழைக்க வேண்டும். ஆதற்குச் சார்பாகவே சிந்திக்க வேண்டும். ஆதனை ஏற்றவர்களைக் கொள்கைவழி
சகோதரர்களாகக் கணித்து அவர்களைப் பிணைக்கும் அம்சங்களை அவர்கள் மத்தியில் வளர்க்க அந்தக்
குர்ஆன் முயற்சி செய்கிறது.