புரட்சிக்குப் பிந்திய எகிப்தின்
புதிய யாப்புக்கான பொதுஜன வாக்கெடுப்பில் யாப்புக்கு ஆதரவாக 63.6% ஆனோர் வாக்களித்திருப்பதாக
உத்தியோகபூர்வமற்ற தேர்தல் பெறுபேறுகள் தெரிவிக்கின்ற நிலையில், இந்த யாப்பை வீழ்த்துவதற்கான
அனைத்து சமாதான வழி முயற்சிகளையும் எடுப்பதாக எகிப்திய எதிரணியான தேசிய மீட்பு முன்னணியின்
உறுப்பினர் ஹம்தீன் ஸபாஹி தொவித்துள்ளார்.
புரட்சிக்குப் பிந்திய எகிப்தில்
இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றமையால், அவர்களை எதிர்ப்பதற்கு
லிபரல்வாதிகள், தேசியவாதிகள், மதச்சார்பற்றோர், முன்னை ஆட்சியின்
பங்காளிகள் தேசிய மீட்பு முன்னணி என்ற பெயரில்
ஒன்றிணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment